மறுங்க மறுங்க
பார்க்கும்
பார்வை......
அலைபாயும்
கருவிழிகள்......
உச்சபட்ச
பீதியில்
உள்ளம்.....
( அட போடா என்னவேணா ஆகட்டும்...)
**
அவனும்
நானும்
ஒன்றே....
எனினும்
அவன்
வேறு.....
நான்
வேறு.....
**
தாயை
இழந்தால்
தனிக்கட்டை தான்....
தந்தையும்
இல்லையாயின்
அனாதைதான்....
எனும்
பாலபாடம்
புரியா
பாலகனாய்....
ஆயிரம்
முறை
அனைத்து வழிகளில்
உணர்த்திட முயன்றாலும்
ஏனோ அவன்
இன்னும்....
இன்னும்......
தூரமாய்
என்னில் இருந்து.
**
தீர்க்க வழியிருந்தும்
தீர்க்கமுடியா.....
பேச முடிந்தும்
பேசா......
உங்களைப் போல
நானும்
சாட்சியாய்
மட்டும்...
ஒரு ஓரமாய்
நின்றபடி.....
No comments:
Post a Comment